Posts

Showing posts with the label #Chennai | #Accident | #People | #Investigate

சென்னை ரயில் விபத்து - விசாரணையில் பகிர் தகவல் வெளியாகியுள்ளது! நீங்கள் கேட்டால் டென்ஷன் ஆயிடுவீங்க

Image
சென்னை ரயில் விபத்து - விசாரணையில் பகிர் தகவல் வெளியாகியுள்ளது! நீங்கள் கேட்டால் டென்ஷன் ஆயிடுவீங்க சென்னை பணிமனையில் இருந்து சென்னை பீச் கடற்கரை ரயில் நிலையத்திற்கு மின்சார ரயில் ஒன்று பயணிகள் இன்றி காலியாக சென்றுக் கொண்டிருந்தது. ஒன்றாம் நடைமேடையில் வந்து கொண்டிருந்த அந்த மின்சார ரயில் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதன் காரணமாக அந்த மின்சார ரயில் ஒன்றாம் நடைமேடையின் மீது ஏறி அங்குள்ள கட்டுமானம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஓட்டுநர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்.  இந்த சம்பவம் தொடர்பாக கடற்கரை ரயில் நிலைய கண்காணிப்பாளர் துர்கா ராம் அளித்த புகாரின் பேரில், சென்னை எழும்பூர் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து, உயிர்க்கு அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாக ரயிலை இயக்கியது, இந்திய தண்டனை சட்டம் பிரிவு 279 - மற்றவர் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அதி வேகமாக வாகனங்களை இயக்குதல் ரயில்வே சட்டம் பிரிவு 151, 154 ஆகிய மூன்று பிரிவுகளில் ஓட்டுநர் பவித்திரன் மீது எழும்பூர் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், ஓட்டுநர் பவித்திரனிடம் நடத்திய தொட