Posts

Showing posts with the label #Tomorrow | #28 | #4 | #Kubera

நாளை 28/4/2022 சித்திரை மாத குபேர பிரதோஷ காலம்! மாலையில் சிவனை இப்படி வழிபட்டால் நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்!

Image
நாளை 28/4/2022 சித்திரை மாத குபேர பிரதோஷ காலம்! மாலையில் சிவனை இப்படி வழிபட்டால் நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்! பிரதோஷத்தில் இருக்கும் ‘தோஷம்’ குற்றத்தை குறிக்கிறது. பிரதோஷம் என்றால் குற்றமற்ற என்று அர்த்தம் ஆகும். பிரதோஷ காலத்தில் சிவனை வழிபடுபவர்களுக்கு எத்தகைய தோஷங்கள் இருந்தாலும், அது அகன்று குற்றமற்றவராக அவர்களை வாழச் செய்யும் அற்புதமான சக்தி வாய்ந்த ஒரு காலமாக இருக்கிறது. சுபகிருது ஆண்டின் சித்திரை மாதத்தில் வியாழன் கிழமை அன்று வரக்கூடிய இந்த பிரதோஷத்தை குபேர பிரதோஷம் என்று கூறலாம். வியாழன் கிழமை என்பது குபேரனுக்கு உரிய கிழமையாகும். இதனுடன் வரக்கூடிய இந்த குபேர பிரதோஷ காலத்தில் சிவனை மனதார வழிபடுபவர்களுக்கு அள்ள அள்ள குறையாத செல்வங்கள் குவியும் என்பது நம்பிக்கை. எனவே நாளை பிரதோஷ காலத்தில் எப்படி எளிமையாக சிவனை வழிபடலாம்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளவிருக்கிறோம்.   மற்ற நேரங்களை காட்டிலும் இந்தப் பிரதோஷ வேளையில் நாம் வைக்கும் வேண்டுதல் ஆனது மிக விரைவாக பலிக்கும் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே உண்டு. சிவபக்தர்கள் பிரதோஷ காலத்தில் சிவனை தரிசித்து வந்தால் மோட்சம்